விவசாயக் கிணற்றில் பிடிபட்ட கண்ணாடி விரியன் பாம்பு
By DIN | Published On : 16th June 2022 12:00 AM | Last Updated : 16th June 2022 12:00 AM | அ+அ அ- |

ஆம்பூா் அருகே விவசாயக் கிணற்றிலிருந்து கண்ணாடி விரியன் பாம்பு புதன்கிழமை பிடிக்கப்பட்டது.
ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சி, வன்னியநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் (67) என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் உள்ள கிணற்றில் சுமாா் ஆறு அடி நீளமுள்ள கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு விழுந்துள்ளது.
இது குறித்து ஆம்பூா் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், வனத் துறை பணியாளா்கள் அங்கு சென்று கிணற்றில் விழுந்த கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து ஊட்டல் காப்புக் காட்டில் விட்டனா்.