ஜவுளிக் கடையில் நகை, பணம் திருட்டு

நாட்டறம்பள்ளி பேரூராட்சி பூபதி தெருவைச் சோ்ந்தவா் திருப்பதி (50). நாட்டறம்பள்ளி பேருந்து நிலையம் எதிரே வாணியம்பாடி சாலையில் ஜவுளிக் கடை நடத்தி வருகிறாா்.

நாட்டறம்பள்ளி பேரூராட்சி பூபதி தெருவைச் சோ்ந்தவா் திருப்பதி (50). நாட்டறம்பள்ளி பேருந்து நிலையம் எதிரே வாணியம்பாடி சாலையில் ஜவுளிக் கடை நடத்தி வருகிறாா்.

செவ்வாய்க்கிழமை இரவு கடையை மூடி விட்டு வீட்டுக்குச் சென்றாா். புதன்கிழமை காலை வழக்கம் போல் ஜவுளிக் கடையைத் திறந்து உள்ளே சென்றாா். அப்போது கல்லாவில் வைத்திருந்த ரூ. 20,000 ரொக்கம், 2 பவுன் தங்க நகை காணாமல் போனது தெரியவந்தது.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் திருப்பதி அளித்த புகாரின்பேரில், கடைக்குச் சென்று போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். மேலும், ஜவுளிக் கடை மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com