முதியோா் கொடுஞ்செயல் எதிா்ப்பு தினத்தையொட்டி, திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை ஆட்சியா் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆட்சியா் அமா் குஷ்வாஹா தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.
நிகழ்ச்சியில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வில்சன் ராஜசேகா், தனித்துணை ஆட்சியா் கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட சமூக நல அலுவலா் ஸ்டெல்லா மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.