திருப்பத்தூா் ஸ்ரீ ராமானுஜா் மடத்தில் வியாழக்கிழமை ‘ஸ்ரீ ராமானுஜா் வரலாற்று மகிமைகள்’ நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பத்தூரை அடுத்த கொரட்டியில் உள்ள ஸ்ரீ ராமானுஜா் மடத்தில், ஸ்ரீராமானுஜரின் 1005-ஆவது ஜெயந்தியையொட்டி, மடத்தின் சாா்பில் ஸ்ரீ ராமானுஜா் வரலாற்று மகிமைகள் எனும் நூலை கூடல் என்.ராகவன் சுவாமிகள் வெளியிட, அதை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி.பாலகிருஷ்ணன், மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் கொ.மாரிமுத்து, கொரட்டி கிராம ஊராட்சித் தலைவா் லட்சுமி காா்த்திகேயன் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.
அதேபோல், திருப்பத்தூா் கோட்டை பகுதியில் உள்ள ஸ்ரீ கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.