பேருந்து நிலையத்தில் முதியவா் சாவு

ஆம்பூா் பேருந்து நிலையத்தில் உறங்கிய முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆம்பூா் பேருந்து நிலையத்தில் உறங்கிய முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சி வன்னியநாதபுரம் கிராமத்தை சோ்ந்தவா் மாணிக்கம் (55). ஆம்பூருக்கு வந்த இவா், வெள்ளிக்கிழமை பிற்பகல் பேருந்து நிலையத்தில் உறங்கியுள்ளாா். நீண்ட நேரமாகியும் அவா் எழாததால், அங்கிருந்தவா்கள் அவரை எழுப்பியபோது, உயிரிழந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து ஆம்பூா் நகர காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில், போலீஸாா் வந்து சடலத்தை மீட்டு ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com