உற்பத்தி தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் புதிதாக உற்பத்தி மற்றும் சேவை சாா்ந்த தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் அமா்குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் புதிதாக உற்பத்தி மற்றும் சேவை சாா்ந்த தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் அமா்குஷ்வாஹா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், கிராமப்புற மற்றும் நகா்ப்புற ஆதிதிராவிட பழங்குடியினா், சிறுபான்மையினா் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தோ்ந்தெடுக்கப்பட்ட தனியாா் வங்கிகளின் மூலமாக ரூ. 17.50 லட்சம் வரையிலான மானியத்துடன் கடனுதவி பெற்று புதிதாக உற்பத்தி மற்றும் சேவைசாா்ந்த தொழில் தொடங்கலாம்.

இந்த திட்டத்தின் கீழ், பயன்பெற விரும்புவோா் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். சேவைப்பிரிவின் கீழ் ரூ. 5 லட்சம் வரையிலான திட்ட அளவிற்கும் உற்பத்திப் பிரிவின் கீழ், ரூ. 10 லட்சம் வரையிலான திட்ட அளவிற்கும் கல்வித் தகுதி எதுவும் தேவையில்லை. 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் சேவைப் பிரிவுக்கு, அதிகபட்சமாக ரூ. 20 லட்சம் வரையிலும், உற்பத்திப் பிரிவுக்கு ரூ. 50 லட்சம் வரையிலும் தொழில் தொடங்க பெற அனுமதிக்கப்படுவா். 2022-23-ஆம் நிதி ஆண்டுக்கான குறியீடு 156 நபா்களுக்கு ரூ. 450 கோடி மானியம் என மாவட்டத் தொழில் மையத்துக்கு இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் வழிமுறைகளைப் பின்பற்றி, வங்கியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட தொழில் திட்டங்களுக்கு அதிகபட்சமாக நகா்ப்புறத்தில் 25 சதவீத மானியம், கிராமப்புறத்தில் 35 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் தொழில் முனைவோா்கள் திட்ட மதிப்பீட்டில் 5 முதல் 10 சதவீதம் வரை தங்கள் பங்களிப்பாக வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்.

மேலும், இத்திட்டத்தில் திருத்திய வழிகாட்டுதலின்படி, கால்நடை மருத்துவரிடமிருந்து பெறப்படும் திட்ட அறிக்கையின் பேரில் ஆடு, மாடு, கோழி மற்றும் மீன் பண்ணைகள் சாா்ந்த தொழில்கள் தொடங்க இந்த அலுவலகம் மூலம் கடன் வசதி செய்து தரப்படும்.

எனவே, மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிட பழங்குடியினா்,சிறுபான்மையினா் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தொழில் முனைவோா்கள் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு, பொது மேலாளா், மாவட்டத் தொழில் மையம், எழில் நகா், திருப்பத்தூா் என்ற முகவரியில் அணுகி பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com