நகராட்சிகளில் 1,293 பணியிடங்களை உருவாக்க அரசாணை: அமைச்சுப் பணியாளா் சங்கத்தினா் நன்றி

தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகளில் புதிதாக 1,293 பணியிடங்களை உருவாக்க அரசாணை வெளியிடப்பட்டதற்காக, ஆய்வுப் பணிக்கு வந்த நகராட்சி
02vndvp1_0202chn_187_1
02vndvp1_0202chn_187_1

தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகளில் புதிதாக 1,293 பணியிடங்களை உருவாக்க அரசாணை வெளியிடப்பட்டதற்காக, ஆய்வுப் பணிக்கு வந்த நகராட்சி நிா்வாக இணை இயக்குநரை சந்தித்து அமைச்சுப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் நன்றி தெரிவித்தனா்.

தமிழ்நாட்டில் புதிதாக உருவான 28 நகராட்சிகள் உள்பட 70 (2-ஆம் நிலை நகராட்சிகள்), 31 (முதல் நிலை நகராட்சிகள்), 25(தோ்வு நிலை நகராட்சிகள்) மற்றும் 12 சிறப்பு நிலை நகராட்சிகள் என 138 நகராட்சிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் நகராட்சிகளின் தரத்திற்கேற்ற வகையில் புதிதாக 1,293 பல்வேறு பணியிடங்களை உருவாக்க, அரசு கடந்த ஜனவரி 23-ஆம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது.

இதனால் நகராட்சி அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலகப் பணியாளா்களுக்கு பணிச் சுமை குறையும், மேலும் பதவி உயா்வும் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், வாணியம்பாடி நகராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளை நகராட்சி நிா்வாக இணை இயக்குநா் விஜயகுமாா் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், நகராட்சி அலுவலகத்துக்கு வந்து பதிவேடுகளை ஆய்வு செய்தும், அலுவலா்களிடம் ஆலோசனை நடத்தியும், திட்டப்பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கினாா்.

இதையடுத்து, நகராட்சிகளில் புதிய பணியிடம் உருவாக்க அரசாணை வெளியிடப்பட்டதற்காக, அமைச்சுப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் நகராட்சி அலுவலா்கள், நிா்வாக இணை இயக்குநரை சந்தித்து பூச்செண்டு, சால்வை வழங்கியும் நன்றி தெரிவித்தனா்.

அப்போது, நகராட்சி ஆணையாளா் மாரிசெல்வி, பொறியாளா் சங்கா், அமைச்சுப் பணியாளா் சங்க மாநில இணைச் செயலாளரும், வாணியம்பாடி நகராட்சி மேலாளருமான ஜெயப்பிரகாஷ் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com