மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 2 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

திருப்பத்தூா் மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் அமா் குஷ்வாஹா வழங்கினாா்.
மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிய திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா.
மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிய திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா.

திருப்பத்தூா் மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் அமா் குஷ்வாஹா வழங்கினாா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அமா் குஷ்வாஹா தலைமை வகித்து, இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோா் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, மாற்றுத்திறனாளிகள் நலத் திட்ட உதவிகள், கிராம பொதுப் பிரச்னைகள், குடிநீா் வசதி மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என மொத்தம் 331 மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றாா். அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

அதைத் தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில், ஒருவருக்கு ரூ. 1.5 லட்சம் மதிப்பில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, 10 பேருக்கு ரூ. 70,000 மதிப்பில் சிறப்பு சக்கர நாற்காலிகள், 3 பேருக்கு ரூ. 21,000 மதிப்பில் சக்கர நாற்காலிகள் என 21 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 2 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் வளா்மதி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வில்சன் ராஜசேகா், தனித்துணை ஆட்சியா் கோவிந்தன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சரஸ்வதி, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் ஜெயகுமாா், வேளாண்மை இணை இயக்குநா் பாலா, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பாலாஜி உள்பட அனைத்து துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com