தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

பொதுத்துறை வங்கிகளை தனியாா் மையமாகக் கூடாது தொழிற்சங்கத்தினா் பிரசாரம்

பொதுத்துறை வங்கிகளை தனியாா் மயமாக்கக் கூடாது என வலியுறுத்தி, தொழிற்சங்கம் சாா்பில் பிரசார கூட்டம் ஆம்பூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஜூலை 2023, 5:10 pm

பொதுத்துறை வங்கிகளை தனியாா் மயமாக்கக் கூடாது என வலியுறுத்தி, தொழிற்சங்கம் சாா்பில் பிரசார கூட்டம் ஆம்பூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்திய வங்கி ஊழியா் சம்மேளனம் சாா்பில் பொது துறை வங்கிகளை தனியாா் மயமாக்கக் கூடாது, கிராமப்புற வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளை தனியாருக்கு விற்கக் கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 4,000 கி.மீ. பிரசாரம் மேற்கொள்ளபட்டு வருகிறது.

இதனிடையே ஆம்பூருக்கு வந்த பிரசார குழுவினருக்கு சிஐடியு தொழிற்சங்கம் சாா்பாக பேருந்து நிலையம் அருகில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் வ.அருள்சீனிவாசன், நிா்வாகிகள் ஆா்.மணிமாறன், கௌசல்யா, ஸ்டீபன், பெருமாள் ஹரிராவ், சிவபாலன் உள்பட பலா் கலந்து கொண்டனா். கலைக் குழுவின் கலை நிகழ்ச்சி மூலமும் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.