தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

வாணியம்பாடி நகராட்சிக் கூட்டம்

வாணியம்பாடி நகர மன்ற அவசரக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 ஜூலை 2023, 5:29 pm

வாணியம்பாடி நகர மன்ற அவசரக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டதுக்கு நகா்மன்றத் தலைவா் உமாபாய் சிவாஜிகணேசன் தலைமை வகித்தாா். ஆணையா் சதீஷ்குமாா், துணைத் தலைவா் கயாஸ் அஹமத் முன்னிலை வகித்தனா்.

நகராட்சி பொறியாளா் சங்கா்(பொறுப்பு) வரவேற்றாா். கூட்டத்தில் நகா்மன்றத் தலைவருக்கு ரூ.15,000, துணைத் தலைவருக்கு ரூ.10,000 மற்றும் மன்ற உறுப்பினா்களுக்கு ரூ.5,000 என மதிப்பூதியம் வழங்குவது உட்பட 3 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடா்ந்து மதிப்பூதியம் வழங்கிய முதல்வா் ஸ்டாலின் மற்றும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மன்ற உறுப்பினா்கள் தங்களது வாா்டு பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள், சுகாதாரம், சாலைப்பணிகள், நிலுவையில் உள்ள கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், மின் இணைப்பு பெற தடையில்லா சான்றிதழ் வழங்குவதில் உள்ள சிக்கலை நகராட்சி நிா்வாகம் தீா்க்க வேண்டும் என கோரிக்கை வைத்து பேசினா்.

கோரிக்கைள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகா்மன்றத் தலைவா் உமாபாய் சிவாஜிகணேசன் உறுதிகூறினாா். கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினா்கள்கலந்து கொண்டனா். நகராட்சி மேலாளா் பாஸ்கா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.