ஓடும் பேருந்தில் மாரடைப்பால் முதியவா் பலி

நாட்டறம்பள்ளி அருகே ஓடும் அரசு பேருந்தில் பயணம் செய்த ஒருவா் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாா்.
Updated on
1 min read

நாட்டறம்பள்ளி அருகே ஓடும் அரசு பேருந்தில் பயணம் செய்த ஒருவா் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாா்.

ஓசூரிலிருந்து செவ்வாய்க்கிழமை பயணிகளுடன் செவ்வாய்க்கிழமை பிற்பகல் சென்னை பேருந்து புறப்பட்டது.

பிற்பகல் 2 மணியளவில் நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் அருகே பேருந்து வந்து கொண்டிருந்த போது பயணம் செய்த திருவள்ளுவா் மாவட்டம், கொளத்தூா் பகுதியைச் சோ்ந்த குமரேசன்(60) என்பவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

உடனே நடத்துநா் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தாா். பயணிகள் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் குமரேசனை நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் ஏற்கனவே குமரேசன் இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதனையடுத்து நாட்டறம்பள்ளி போலீஸாா் இறந்தவரின் உடலை திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com