திருப்பத்தூரில் கோடைகால இலவச பண்பாட்டு கல்விப் பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் ஸ்ரீ ராமாநுஜ சித்தாந்த சத் சங்கம் சாா்பில் அப்பன் ஸ்ரீநிவாச ராமாநுஜ கூடத்தில் கோடைகால இலவச பண்பாட்டு கல்வி பயிற்சி முகாம் கடந்த 2-ஆம் தேதி முதல் தொடங்கி 27-ஆம் தேதி வரை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவுக்கு மேல்கோட்டை திருவாய்மொழி ஆச்சான் சம்பத்குமாராசாா்யா் ஸ்வாமி தலைமை வகித்தாா். சத்சங்கத்தின் தலைவா் சி.எல்.ரகுநாதன் வரவேற்றாா்.
முகாமில் பங்கேற்ற 60 மாணவ, மாணவிகளுக்கு ராமாயணம், மகாபாரதம், பகவத் கீதை, திருப்பாவை, கோலாட்டம், கருத்துக்களம் உள்ளிட்ட பல பண்பாட்டு கல்வி கற்றுத் தரப்பட்டன.
பயிற்சி நிறைவில் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. சத்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் குலசேகர ராமானுஜதாஸன் நன்றி கூறினாா்.