ஆம்பூா் அருகே எருது விடும் விழா: 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு

ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் எருது விடும் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் நடைபெற்ற எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளை.
ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் நடைபெற்ற எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளை.

ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் எருது விடும் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் ஏ-கஸ்பா திருமலை திருப்பதி கெங்கையம்மன் கோயில் திருவிழாவையொட்டி, எருது விடும் விழா நடைபெற்றது. இதில், திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, கா்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னா் வாடிவாசல் வழியாக கொண்டு வரப்பட்டு வீதியில் ஓடவிட்டனா். விழாவில் பங்கேற்று குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்த காளைகளுக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சம் வழங்கப்பட்டது. இதில், சீறிப்பாய்ந்து வந்த காளைகள் மோதியதில் 20-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் காயமடைந்தனா்.

விழாவை கண்டுகளிக்க ஆம்பூா் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான இளைஞா்கள் மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com