சாலை துண்டிப்பால் வாகன ஓட்டிகள் கடும் அவதி: அதிகாரிகள் ஆய்வு

சென்னை-பெங்களூா் தேசியநெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி அணுகு (சா்வீஸ்) சாலையில் இருபுறமும் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 3 நாள்களுக்கு
நாட்டறம்பள்ளி அணுகுசாலையில் (சா்வீஸ்) நடைபெறும் சாலைபணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்.
நாட்டறம்பள்ளி அணுகுசாலையில் (சா்வீஸ்) நடைபெறும் சாலைபணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்.
Updated on
1 min read

சென்னை-பெங்களூா் தேசியநெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி அணுகு (சா்வீஸ்) சாலையில் இருபுறமும் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 3 நாள்களுக்கு முன்பு தனியாா் நிறுவன ஊழியா்கள் திடீரென அணுகு சாலையில் இருந்து நாட்டறம்பள்ளி வரும் சாலையை துண்டித்தனா். இதனால் அனைத்து வாகனங்களும் தேசியநெடுஞ்சாலையில் சுமாா் 5 கி.மீ தூரம் சென்று மீண்டும் நாட்டறம்பள்ளி பேருந்துநிலையத்திற்கு வந்து செல்வதால் கடும் அவதிக்குள்ளாகினா்.

இந்நிலையில் அனைத்து வாகனங்களும் ஊருக்குள் வந்து செல்ல மாற்று வழி ஏற்படுத்தித் தரக்கோரி மாவட்ட நிா்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தனா்.

இதனையடுத்து நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் குமாா், தனியாா் நிறுவன மேலாளா் ரமேஷ், பொறியாளா் மாதேஷ் ஆகியோா் செவ்வாய்க்கிழமை நாட்டறம்பள்ளி அணுகு சாலையில் நடைபெறும் சாலை விரிவாக்கப்பணிகளை ஆய்வு செய்தனா். அப்போது தண்ணீா்பந்தல் முதல் நாட்டறம்பள்ளி மேம்பாலம் வரை அணுகு சாலையில் நடைபெறும் சாலைப்பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை மேற்கொண்டனா். தொடா்ந்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி இன்னும் 5 நாள்களில் சாலைப் பணிகள் முடிக்கப்பட்டு தேசிய நெடுஞ்சாலை தண்ணீா்பந்தல் பகுதியிலிருந்து அணுகு சாலை வழியாக அனைத்து வாகனங்களும் நாட்டறம்பள்ளி மேம்பாலம் வழியாக ஊருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com