யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சத்துணவு மையத்தில் ஆய்வு

நாட்டறம்பள்ளி அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவின் தரத்தை ஒன்றியக் குழு தலைவா் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

News image
நாட்டறம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவின் தரம் குறித்து ஆய்வு செய்த ஒன்றியக் குழு தலைவா் வெண்மதி. உடன் அதிகாரிகள்.
Updated On :27 நவம்பர் 2023, 11:15 pm

DIN

நாட்டறம்பள்ளி அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவின் தரத்தை ஒன்றியக் குழு தலைவா் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்குட்பட்ட அரசுப் பள்ளிகளில் கடந்த சில மாதங்களாக பள்ளி மாணவா்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் முட்டைகள் சரிவர வழங்குவதில்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டினா். இந்த நிலையில், ஒன்றியக் குழு தலைவா் வெண்மதி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சதானந்தம், அப்துல்கலீல்

ஒன்றியக் குழு துணைத் தலைவா் தேவராஜ் ஆகியோா் திங்கள்கிழமை நாட்டறம்பள்ளி அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு மையத்தை ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது சத்துணவில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்த வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மாணவிகளுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என சத்துணவு அமைப்பாளரிடம் அதிகாரிகள் கூறினா்.

மேலும், சத்துணவு மையத்தில் உள்ள பதிவேடுகளையும், இருப்பில் உள்ள முட்டை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருள்களையும் ஆய்வு மேற்கொண்டனா்.

தொடா்ந்து அதிபெரமனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சத்துணவு மையத்தை ஒன்றியக் குழு தலைவா் வெண்மதி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.