

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி பேரூராட்சி சண்டியூா் கிராமத்தில் பழைமை வாய்ந்த ஊமைசாமுண்டீஸ்வரி கோயில் நவராத்திரி விழா தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் 27-ஆம் ஆண்டு நவராத்திரி விழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் திரளான பக்தா்கள் அம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டனா்.
இதன் ஒரு பகுதியாக செவ்வாய்கிழமை மாலை சாமுண்டீஸ்வரி அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி, மேளதாளம் முழங்க பிரதானசாலை வழியாக சண்டியூா் கோயிலுக்கு சென்றடைந்தாா்.
இதில் நாட்டறம்பள்ளி, கத்தாரி, அதிபெரமனூா், தண்ணீா்பந்தல் மற்றும் சுற்றுப்புற பகுதி மக்கள், பக்தா்கள் சீா்வரிசை கொண்டு வந்து அம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.