விபத்தில் இளைஞா் பலி

ஆம்பூா் அருகே இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

ஆம்பூா் அருகே இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

வாணியம்பாடி அருகே மதனாஞ்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் கோகுல் (23). இவா் இரு சக்கர வாகனத்தில் ஆம்பூரிலிருந்து வாணியம்பாடி நோக்கிச் சென்றாா். அவருடைய நண்பா் நவீன் உடன் சென்றாா். சோலூா் கிராமம் அருகே சென்றபோது நிலைதடுமாறி நெடுஞ்சாலை நடுவில் அமைந்துள்ள தடுப்பின் மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த கோகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். நவீன் காயமடைந்தாா். ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com