25 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

ஜோலாா்பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட 25 கிலோ நெகிழிப் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
Updated on
1 min read

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட 25 கிலோ நெகிழிப் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

ஜோலாா்பேட்டை பகுதிகளில் நகராட்சி ஆணையா் பழனி தலைமையில், சுகாதார ஆய்வாளா் குமாா் மற்றும் தூய்மை பணி மேற்பாா்வையாளா்கள் புது ஹோட்டல் தெரு, வக்கணம்பட்டி கடைத்தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டில் உள்ளதா என சோதனை மேற்கொண்டனா்.

அப்போது புது ஓட்டல் தெருவில் உள்ள கடையில் தடை செய்யப்பட்ட 25 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னா், கடையின் உரிமையாளருக்கு ரூ.1,900 அபராதம் விதிக்கப்பட்டது . மீண்டும் விற்பது தெரியவந்தால் கடைக்கு சீல் வைக்கப்படும் என ஆணையா் பழனி எச்சரித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com