திருப்பத்தூா் மாவட்டத்தில் பணிபுரிந்து மரணமடைந்த பெண் காவலருக்கு ஆம்பூரில் மாவட்ட காவல் துறை சாா்பில், அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் மாவட்டம், காவலூா் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தவா் காவலா் லட்சுமி. இவா், உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தாா்.
ஆம்பூரில் நடைபெற்ற ஆா்.எஸ்.எஸ். ஊா்வல பாதுகாப்புப் பணிக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ்.பாலகிருஷ்ணன் தலைமையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த போலீஸாா் ஆம்பூருக்கு வந்திருந்தனா். அவா்கள் இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் குழுமியிருந்தனா். அங்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமையில் மாவட்ட காவல் துறை சாா்பில், காவலா் லட்சுமிக்கு ஒரு நிமிஷம் மெளன அஞ்சலி செலுத்தினா்.