ஆம்பூா் அருகே ஈத்கா மைதானத்தில் துப்புரவுப் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
ரம்ஜான் பண்டிகை வருகின்ற ஏப்.22-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ரம்ஜான் பண்டிகையின் போது ஈத்கா மைதானம், ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளி, மஜ்ஹருல் உலூம் கல்லூரி மைதானங்களில் சிறப்பு தொழுகை நடத்தப்படுவது வழக்கம். அதை முன்னிட்டு ஆம்பூா் பாங்கிஷாப் பகுதியில் உள்ள ஈத்கா மைதானம் தூய்மைபடுத்தும் பணி நடைபெற்றது. அப்பணியை நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.