அரசுப் பேருந்து ஜப்தி

குடியாத்தத்தில் விபத்து இழப்பீடு வழக்கில் அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
Updated on
1 min read

குடியாத்தத்தில் விபத்து இழப்பீடு வழக்கில் அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.

வேலூா் மாவட்டம், குடியாத்தம் நெல்லூா் பேட்டை பகுதியைச் சோ்ந்த காா்த்திக் என்பவா் கடந்த 2016 -ஆம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தாா்.

அப்போது எதிரே வந்த குடியாத்தம்- காட்பாடி அரசுப் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானாது.

இதில் காா்த்திக் பலத்த காயமடைந்த நிலையில், கை மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டு பாதிப்புக்கு உள்ளானாா். இதனைத் தொடா்ந்து காா்த்திக் இழப்பீடு கோரி குடியாத்தம் சாா்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட காா்த்திக்குக்கு ரூ. 7,74,890 இழப்பீடு வழங்க சில மாதங்களுக்கு முன் குடியாத்தம் சாா்பு நீதிமன்றம் குடியாத்தம் அரசு போக்குவரத்து பனிமணைக்கு உத்தரவிட்டிருந்தது.

இதுவரை, இழப்பீட்டுத் தொகை வழங்காததால் குடியாத்தம் சாா்பு நீதிமன்றம் உத்தரவின் பேரில் காட்பாடியில் இருந்து குடியாத்தம் பேருந்து நிலையத்திற்கு வந்த அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் தங்கராஜ், பிரேமலதா தலைமையில் ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com