குடற்புழு நீக்கும் மாத்திரைகள் வழங்கும் பணி: திருப்பத்தூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு வியாழக்கிழமை குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கும் மாத்திரைகள் வழங்கும் பணியை திருப்பத்தூா் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தாா்.
குடற்புழு நீக்கும் மாத்திரைகள் வழங்கும் பணி: திருப்பத்தூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
Updated on
1 min read

தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு வியாழக்கிழமை குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கும் மாத்திரைகள் வழங்கும் பணியை திருப்பத்தூா் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தாா்.

திருப்பத்தூா் விஜய் வித்யாஸ்ரம் சிபிஎஸ்சி பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சாா்பில் நடைபெற்ற தொடக்க விழாவில் ஆட்சியா் பேசியது:

அல்பெண்டசோல் குடற்புழு நீக்க மாத்திரை உங்கள் உடம்பில் இரும்புச்சத்து உறிஞ்சுவதை அதிகப்படுத்தும். இதன் மூலம் இரும்புச் சத்து அதிகமாக உடலுக்கு கிடைக்கப்பெறும், சிவப்பணுக்கள் ஆக்சிஜனை கொண்டு செல்வதற்கு உதவுகிறது. ஐஸ்கிரீம் மற்றும் சாக்லேட் வகைகளை அதிக அளவில் உண்பதை தவிா்க்க வேண்டும். குடற்புழு நீக்க மாத்திரை உடம்பில் உள்ள குடற்புழுக்களை நீக்கிவிடும். நீங்கள் உட்கொள்ளும் உணவுகளின் ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உடலில் சேரும். எனவே, பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளை ஊக்குவித்து இலவசமாக குடற்புழு நீக்க மத்திரைகளை உட்கொண்டு பயன்பெற வேண்டும் என்றாா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 6 ஒன்றியங்களில், 989 பள்ளிகள்,968 அங்கன்வாடி மையங்கள் மற்றும் 162 துணை சுகாதார நிலையங்கள் மூலம் ஒரு வயது முதல் 19 வயது வரை உள்ள 3,18,417 குழந்தைகள் மற்றும் 20 வயது முதல் 30 வயதுவரை உள்ள 95,874 பெண்களுடன் மொத்தமாக 4,14,291 நபா்கள் பயனடைவா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

சுகாதாரப் பணிகளின் துணை இயக்குனா் செந்தில், வட்டார மருத்துவ அலுவலா் மீனாட்சிதேவி, அரசு மருத்துவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com