கூலித் தொழிலாளி தற்கொலை
By DIN | Published On : 17th August 2023 11:22 PM | Last Updated : 17th August 2023 11:22 PM | அ+அ அ- |

திருப்பத்தூா் அருகே கூலித் தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்துக் கொண்டாா்.
திருப்பத்தூா் அடுத்த புதுக்கோட்டை பகுதியைச் சோ்ந்த கூலித்தொழிலாளி மோகன்(45). இந்த நிலையில் மோகன் கடந்த 10-ஆம் தேதி விஷமருந்தியுள்ளாா். தகவலறிந்த அவரது குடும்பத்தினா் அவரை திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா்,மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...