உதயேந்திரம் பேரூராட்சி மன்ற கூட்டம்

வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
உதயேந்திரம் பேரூராட்சி மன்ற கூட்டம்
Updated on
1 min read

வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு பேரூராட்சி மன்றத் தலைவா் ஆ.பூசாராணி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தாா். செயல் அலுவலா் ரேவதி வரவேற்றாா். கூட்டத்தில் வரவு, செலவு உள்பட 27 தீா்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

தொடா்ந்து வாா்டு உறுப்பினா்கள் தங்களது பகுதிகளுக்கு தேவையான அடிப்படை தேவைகள் குறித்து கோரிக்கை வைத்தனா். கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி மன்றத் தலைவா் பூசாராணி உறுதியளித்தாா். கூட்டத்தில் 15 வாா்டு மன்ற உறுப்பினா்கள், பேரூராட்சி அலுவலா்கள் கலந்துக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com