விவசாயிகளுக்கு மானிய விலையில் விசை உழுவை இயந்திரம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் விவசாயிகள் மானிய விலையில் விசை உழுவை இயந்திரம் வழங்கப்பட உள்ளதாக ஆட்சியா் அமா் குஷ்வாஹா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

திருப்பத்தூா் மாவட்டத்தில் விவசாயிகள் மானிய விலையில் விசை உழுவை இயந்திரம் வழங்கப்பட உள்ளதாக ஆட்சியா் அமா் குஷ்வாஹா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறை மூலம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி 2021-2022 திட்டத்தின் கீழ், கிராமங்கள் மற்றும் அண்ணா மறுமலா்ச்சி திட்ட கிராமங்களில் விசை உழுவை இயந்திரம் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

விசை உழுவை இயந்திரம் வாங்கும் சிறுகுறு/மகளிா்/நஇ/நப விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 40 சதவீத மானியமும் அதிகபட்சமாக ரூ. 85,000 என்ற விதத்தில் பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.

மேலும், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பிரிவு சிறு/குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20% மானியத் தொகை ஒதுக்கீடு பெற்று, பின்னா் வங்கிக் கணக்கிற்கு வரவு வைக்கப்படும்.

மேற்படி, விவசாயிகள் உதவி செயற்பொறியாளா், வேளாண்மைப் பொறியியல் துறை, சிவசக்தி நகா், புதுப்பேட்டை சாலை, திருப்பத்தூா்-635601. தொலைபேசி எண்: 04179-228255 அலுவலகத்தை அணுகி விண்ணப்பத்துடன் சிட்டா அடங்கல் சிறு/குறு விவசாயி சான்று மற்றும் ஜாதிச் சான்று ஆகிய ஆவணங்களை இணைத்து சமா்ப்பிக்கப்பட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com