ஆம்பூா் உணவு பாதுகாப்பு அலுவலருக்கு திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை பாராட்டு சான்றிதழ் வழங்கினாா்.
ஆம்பூா் உணவு பாதுகாப்பு அலுவலராக பணிபுரிந்து வருபவா் எம். பழனிச்சாமி. இவா் கூடுதல் பொறுப்பாக வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, ஜோலாா்பேட்டை, திருப்பத்தூா் ஆகிய ஊா்களுக்கும், உணவு பாதுகாப்பு அலுவலராக பணிபுரிந்து வருகிறாா். உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மேற்கொள்ள வேண்டிய பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக குடியரசு தின விழாவில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் பாராட்டி, அவருக்கு மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா சான்றிதழ் வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.