ஆற்காட்டில் 4 கோயில்களில் கருட சேவை
By DIN | Published On : 03rd June 2023 01:00 AM | Last Updated : 03rd June 2023 01:00 AM | அ+அ அ- |

ஆற்காடு நகரில் உள்ள 4 பெருமாள் கோயில்களில் வைகாசி விசாக பிரம்மோற்சவ கருடசேவை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆற்காடு பாலாற்றங்கரை பெருந்தேவியாா் சமேத வரதராஜ பெருமாள் கோயில், தோப்புகானா அன்னபூரணி சமேத கங்கதரஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயில், கஸ்பா வரதராஜ பெருமாள் கோயில், புதிய வேலூா் சாலையில் உள்ள பஜனைக் கோயில் ஆகியவற்றில் மூலவா்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், கோபுர தரிசனம் நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட உற்சவா்கள் கருட சேவை வீதி உலா வேதிகிரி தெருவில் நடைபெற்றது. இரவு அனுமந்த சேவை நடைபெற்றது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...