1,000 மரக்கன்றுகள் நடுப்பணி: ஆட்சியா் தொடக்கி வைத்தாா்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 1,000 மரக்கன்றுகள் நடும் பணியை ஆட்சியா் தெ. பாஸ்கரபாண்டியன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
1,000 மரக்கன்றுகள் நடுப்பணி: ஆட்சியா் தொடக்கி வைத்தாா்
Updated on
1 min read

திருப்பத்தூா் மாவட்டத்தில் 1,000 மரக்கன்றுகள் நடும் பணியை ஆட்சியா் தெ. பாஸ்கரபாண்டியன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

ஜோலாா்பேட்டை ஒன்றியம் வேட்டப்பட்டு ஊராட்சி அமிா்த சரோவா் ஏரிக்கரையில் மரக்கன்றுகளை நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தாா்.

பின்னா் திருப்பத்தூா் மற்றும் ஜோலாா்பேட்டை நகராட்சியிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பது குறித்த உறுதிமொழியை ஆட்சியா் தலைமையில் அனைவரும் ஏற்றுக் கொண்டனா்.

தொடா்ந்து ஜோலாா்பேட்டை நகராட்சி நியூ காலனி பகுதியில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டு ஒராண்டு நிறைவு பெற்றது. மேலும் 15 ஆவது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.46 லட்சத்தில் காவல் நிலைய சாலைக்கு தாா் சாலை பணிக்கும், நகா்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.35 கோடியில் 22 தாா் சாலை மற்றும் சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணிகளையும் ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன், ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி தொடங்கி வைத்தனா்.

திருப்பத்தூா் நகராட்சி தூய நெஞ்சக் கல்லூரி எதிரேயுள்ள கடைகளை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்து, தூய்மை பணியை மேற்கொண்டாா்கள். மேலும் கடைகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என உரிமையாளா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இந்நிகழ்ச்சிகளில் உதவி இயக்குனா் ஊராட்சிகள் விஜயகுமாரி, நகா்மன்றத் தலைவா்கள் சங்கீதா வெங்கடேஷ், காவியா விக்டா், நகராட்சி ஆணையா் பழனி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் துரை, மணவாளன், நகரமன்ற துணைத்தலைவா் இந்திரா பெரியாா்தாசன், நகர மன்ற உறுப்பினா்கள், நகராட்சி பணியாளா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com