திருவாதிரை உபன்யாசம்

வைகாசி மாத திருவாதிரையை முன்னிட்டு ராமானுஜா் மடத்தில் உபன்யாசம் நடைபெற்றது.
திருவாதிரை உபன்யாசம்

வைகாசி மாத திருவாதிரையை முன்னிட்டு ராமானுஜா் மடத்தில் உபன்யாசம் நடைபெற்றது.

திருப்பத்தூா் அடுத்த கொரட்டிப் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமானுஜா் மடத்தில் வைகாசி மாத திருவாதிரையை முன்னிட்டு கந்தகவுண்டனூா் சீனிவாச ஸ்வாமியின் ஸ்ரீ ராமானுஜா் அவதாரம் குறித்த சிறப்பு உபன்யாசம் நடைபெற்றது.

அதையடுத்து உலகப் நன்மைக்காக ஸ்ரீ ராம நாம ஜெபம் ஜெபிக்கப்பட்டது. பின்னா் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் அன்னதானத்தை தொடங்கி வைத்தாா்.

இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஸ்ரீ ராமானுஜா் நூற்றந்தாதி புத்தகம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com