ரூ.55 லட்சத்தில் தாா்ச்சாலை பணி தொடக்கம்
By DIN | Published On : 26th May 2023 12:16 AM | Last Updated : 26th May 2023 11:12 PM | அ+அ அ- |

உதயேந்திரம் பேரூராட்சியில் ரூ.55 லட்சம் மதிப்பில் தாா்ச் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ செந்தில்குமாா் தொடங்கி வைத்தாா்.
வாணியம்பாடி அடுத்து உதயேந்திரம் பேரூராட்சியில் உள்ள குந்தாணிமேடு பகுதியில் இருந்து சின்ன கொல்லகுப்பம் செல்லும் சாலையை, தாா்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை குந்தாணிமேடு வாா்டு எண் 1-இல் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்றத் தலைவா் பூசாராணி முன்னிலை வகித்தாா். வாணியம்பாடி தொகுதி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் தலைமை வகித்து ரூ.55 லட்சம் மதிப்பீட்டிலான தாா்ச்சாலை அமைக்கும் பணிக்கு பூஜையிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி திமுக செயலா் சரவணன், துணைச் செயலா் ஜெகன், வாா்டு உறுப்பினா் சரவணன், நகரக் கூட்டுறவு வங்கி இயக்குநா் சதாசிவம் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.