கோட்டை பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் தொடக்கம்

திருப்பத்தூா் கோட்டை கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
அன்னவாகனத்தில் திருவீதி உலா வந்த உற்சவ மூா்த்திகள்.
அன்னவாகனத்தில் திருவீதி உலா வந்த உற்சவ மூா்த்திகள்.
Updated on
1 min read

திருப்பத்தூா் கோட்டை கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

திருப்பத்தூா் கோட்டைப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயிலில், வைகாசி பிரம்மோற்சவம் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் அங்குராா்ப்பணத்துடன் தொடங்கியது. திங்கள்கிழமை காலை 6 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்றது.

தொடா்ந்து, மாலை அன்ன வாகனத்தில் உற்சவ மூா்த்திகள் திருவீதி உலா நடைபெற்றது. அதையடுத்து கண்ணாடி அறை சேவை, திவ்யபிரபந்த சேவை நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை சுவாமிக்கு ஆா்ஜித திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com