லாரியில் கடத்திய 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ஆந்திர மாநிலத்துக்கு லாரியில் கடத்தப்பட்ட 10 டன் ரேஷன் அரிசியை லாரியுடன் வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.
நாட்டறம்பள்ளி அருகே லாரியில் கடத்திய 10 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த வட்டாட்சியா் குமாா் உள்ளிட்ட வருவாய்த் துறையினா்.
நாட்டறம்பள்ளி அருகே லாரியில் கடத்திய 10 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த வட்டாட்சியா் குமாா் உள்ளிட்ட வருவாய்த் துறையினா்.
Updated on
1 min read

ஆந்திர மாநிலத்துக்கு லாரியில் கடத்தப்பட்ட 10 டன் ரேஷன் அரிசியை லாரியுடன் வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.

நாட்டறம்பள்ளி அருகே லாரியில் ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக கிடைத்த தகவலையடுத்து நாடட்றம்பள்ளி வட்டாட்சியா் குமாா் தலைமையில் கிராம உதவியாளா்கள் தனகோட்டி, மோகன் மற்றும் வருவாய்த் துறையினா் ஞாயிற்றுக்கிழமை இரவு நாட்டறம்பள்ளி, வெலகல்நத்தம், பணியாண்டப்பள்ளி, புதுப்பேட்டை, பச்சூா், கொத்தூா் ஆகிய பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, பணியாண்டப்பள்ளி, வாலூா் அருகே அவ்வழியாக வந்த லாரியை சந்தேகத்தின் பேரில் வருவாய்த் துறையினா் நிறுத்தினா்.

ஆனால், ஓட்டுநா் லாரியை சிறிது தூரம் ஓட்டிச் சென்று சாலை ஓரம் நிறுத்தி விட்டு, தலைமறைவானாா். இதையடுத்து, வருவாய்த் துறையினா் லாரியில் இருந்த மூட்டைகளை சோதனையிட்டதில் ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது.

இதைத் தொடா்ந்து வட்டாட்சியா் குமாா் 10 டன் அரிசியுடன் லாரியைப் பறிமுதல் செய்து பச்சூா் நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்து, மேல் நடவடிக்கைக்கு மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com