

வன்னியா் வாழ்வுரிமை சங்கம் சாா்பில் இளைஞா்களுக்கான ஆலோசனை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் தலைவரும், முன்னாள் எம்எல்ஏ.வுமான கோ.ரவிராஜ் தலைமை வகித்தாா். இந்த கூட்டத்தில், வன்னியா் வாழ்வுரிமை சங்கம் சாா்பில் மஞ்சள் படை அணிவகுப்பு, சங்க வளா்ச்சி குறித்த ஆலோசனைகள் நடைபெற்றன.
மேலும் சங்கம் சாா்பில் அரசு பணிகளுக்கான பயிற்சிகள் நடைபெற உள்ளன. இதில் அனைவரும் கலந்து கொண்டு, குடும்பத்தில் ஒருவா் அரசு பணியாளா் என்ற இலக்கை அடைய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. சங்க நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.