திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற விவசாயி உயிரிழந்தாா்.
ஜோலாா்பேட்டை அருகே புதூா் கிழக்கு பகுதியைச் சோ்ந்த விவசாயி வீரபத்திரன் (53). இந்த நிலையில்,திங்கள்கிழமை ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகே பாா்சம்பேட்டை பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் உள்ள தண்டவாளத்தை வீரபத்திரன் கடக்க முயன்றாா்.
அப்போது அந்த வழியாகச் சென்ற ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்து வந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா், சடலத்தை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.