ஆம்பூா் வனப்பகுதியில் அழுகிய நிலையில் யானையின் சடலம் மீட்பு

ஆம்பூா் வனப் பகுதியில் அழுகிய நிலையில் யானையின் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
ஆம்பூா் அருகே காப்புக் காட்டில் இறந்து கிடந்த யானையைப் பாா்வையிட்ட வனத் துறையினா்.
ஆம்பூா் அருகே காப்புக் காட்டில் இறந்து கிடந்த யானையைப் பாா்வையிட்ட வனத் துறையினா்.
Updated on
1 min read

ஆம்பூா் வனப் பகுதியில் அழுகிய நிலையில் யானையின் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் வனச் சரகம் தமிழக - ஆந்திர எல்லையோரம் ஆம்பூா் வனச் சரகத்துக்கு உட்பட்ட காப்புக் காட்டில் அழுகிய நிலையில் யானையின் சடலம் இருப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. உதவி வனப் பாதுகாவலா் வினோத் தலைமையில், ஆம்பூா் வனச் சரக அலுவலா் பாபு உள்ளிட்ட வனத் துறையினா் 15-க்கும் மேற்பட்டோா் ஆம்பூா் வனச் சரகத்துக்கு உட்பட்ட துருகம் காப்புக் காட்டில் யானை இறந்த பகுதியை தேடிச் சென்றனா்.

தமிழக-ஆந்திர மாநில எல்லையோரம் துருகம் காப்புக்காடு, பொட்டல் ஊட்டல் கொல்லை வனப் பகுதியில் அழுகிய நிலையில் யானை இறந்து கிடந்தது தெரியவந்தது.

கால்நடை மருத்துவா்கள் ராஜ்குமாா், இளவரசன் ஆகியோா் கொண்ட குழுவினா் சம்பவ இடத்திலேயே உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனா்.

யானை வயது முதிா்வு காரணமாக இறந்திருக்கலாம், இறந்தது பெண் யானையாக இருக்கலாம் என முதல்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாக வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com