

நாட்டறம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி அரசினா் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ க.தேவராஜி வழங்கினாா்.
நிகழ்ச்சிக்கு ஜோலாா்பேட்டை ஒன்றியக் குழு தலைவா் சத்யா தலைமை வகித்தாா். ஒன்றிய திமுக செயலா் சதீஷ்குமாா், ஊராட்சி மன்றத் தலைவா் புரட்சி சந்திரன், கவுன்சிலா் சீனிவாசன் முன்னிலை வகித்தனா். தலைமையாசிரியா் மலா்க்கொடி வரவேற்றாா்.
இதில், சிறப்பு அழைப்பாளராக ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் 50 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்திப் பேசினாா். இதில், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் சிவரஞ்சனி, ஆசிரியா்கள், பெற்றோா் -ஆசிரியா் சங்க நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.