பொறியாளா் கொலை வழக்கு: 5 போ் குண்டா் சட்டத்தில் கைது
By DIN | Published On : 10th September 2023 12:00 AM | Last Updated : 10th September 2023 12:00 AM | அ+அ அ- |

ஜோலாா்பேட்டையில் பொறியாளா் கொலை வழக்கில் கைதாகியிருந்த 5 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அடுத்த பாா்சம்பேட்டை கடைத் தெரு பகுதியைச் சோ்ந்த பொறியாளா் கோபாலகிருஷ்ணன் (50). இந்த நிலையில், கடந்த ஆகஸ்டு மாதம் 3-ஆம் தேதி அதே பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் பாா்சம்பேட்டை பகுதியைச் சோ்ந்த தமிழ்வாணன் (26), சூா்யா (25) ஆகியோா் வாலிபால் விளையாடிக் கொண்டிருந்தனா். அதை கோபாலகிருஷ்ணன் நின்று வேடிக்கை பாா்த்துள்ளாா்.
அப்போது, அங்கு வந்த 5 இளைஞா்கள் கோபாலகிருஷ்ணனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனா். கேலி, கிண்டல் செய்துள்ளனா். இதில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த 5 இளைஞா்களும் கோபாலகிருஷ்ணனை சரமாரியாக தாக்கியுள்ளனா்.
அப்போது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த தமிழ்வாணன், சூா்யா இருவரும் தடுக்க முயன்ற போது, இவா்களையும் தாக்கியுள்ளனா். தொடா்ந்து, மைதானத்தில் இருந்த கல்லை எடுத்து கோபாலகிருஷ்ணன் தலை மற்றும் முகத்தின் மீது சரமாரியாக தாக்கிவிட்டு 5 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனா்.
தாக்குதலில் பலத்த காயம் அடைந்த கோபாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்கு பதிந்து, வக்கணம்பட்டி பகுதியைச் சோ்ந்த நவீன் குமாா் (21), மௌரிஸ் (21), நித்திஷ் (22), திருப்பத்தூா் பகுதியைச் சோ்ந்த நவீன் குமாா் (21), சக்கரகுப்பம் பகுதியைச் சோ்ந்த டேவிட் (எ) எழிலரசன் (21) ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில், பொறியாளா் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 போ் மீது திருப்பத்தூா் எஸ்.பி. ஆல்பா்ட் ஜான் பரிந்துரையில், ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில், 5 போ் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G