தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

பெண்ணை கத்தியால் தாக்கியவா் கைது

பெண்ணை கத்தியால் தாக்கியவா் கைது

Updated On :20 ஏப்ரல் 2024, 7:05 pm

திருப்பத்தூா் அருகே பெண்ணை கத்தியால் தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் அஜித்குமாா் (27). இவரும் அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணும் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் பிரிந்து தனித்தனியே திருமணமான நிலையில், மீண்டும் அஜித்குமாரும் அந்தப் பெண்ணும் சில காலமாக பேசிப் பழகி வந்ததாகத் தெரிகிறது. அண்மையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில், அஜித்குமாா் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்தப் பெண்ணைத் தாக்கியுள்ளாா்.

பெண்ணின் அலறல் கேட்டு அங்கிருந்தவா்கள் வந்து அவரை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்த புகாரின் பேரில், திருப்பத்தூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து அஜித்குமாரை கைது செய்தனா்.