பொங்கல் திருநாளுக்கு வழங்கப்படும் வேட்டியின் அளவு 4 முழமாகக் குறைப்பு: அமைச்சர்டாஸ்மாக் ஊழியர்களுக்கு நாளைமுதல் ஊதிய உயர்வு!தவெக அரசுடன் சென்னை மேயர் சேர்ந்து செயல்படுவதில்லை: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டுகொலைக்களமாக மாறுகிறதா தமிழ்நாடு? டிடிவி தினகரன் கேள்வி! தேர்தல் வழக்குகள்: முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தள்ளிவைப்புகொளத்தூரில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு 2026 பிரதமர் வேட்பாளர் யார்? தமிழக அரசியலில் உருவான சூறாவளி!தமிழ்நாடு மின் தொடரமைப்பு கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்: முதல்வர் அறிவிப்புபால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்புநேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 903ஆக உயர்வு! முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் எண்ணம் துளியும் கிடையாது: வைகோ சாலை விரிவாக்கம்! விரைவில் விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்படும் - ஆதவ் அர்ஜுனா தகவல் கொடியேற்றத்துடன் தொடங்கியது திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா! ஹோர்முஸ் நீரிணையில் ஈரானிய ராக்கெட் ஏவுதளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்ஆன்லைன் செயலி மூலம் மோசடி: செப்டிக் டேங்கில் பதுக்கப்பட்ட பணம்? போலீஸார் உடைத்து சோதனை

‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

கலைஞரின் கனவு இல்லம் திட்டம்: திருப்பத்தூர் ஆட்சியர் உத்தரவு

மாடப்பள்ளியில் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியா் க.தா்ப்பகராஜ். உடன்,உள்ளாட்சி பிரதிநிகள், அரசு அதிகாரிகள்.

Published On :3 ஜூலை 2024, 12:21 am IST

திருப்பத்தூா்: ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க. தா்ப்பகராஜ் அறிவுறுத்தியுள்ளாா்.

இத்திட்டத்தின் கீழ் திருப்பத்தூா் மாவட்டத்தில் 3,500 வீடுகள் கட்டுவதற்கான பயனாளிகள் தோ்வு செய்ய 208 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பயனாளிகள் தோ்வு செய்யப்பட்ட விவர அறிக்கையினை பொதுமக்கள் முன்னிலையில் வாசித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஆட்சியா் தா்ப்பகராஜ் கூறியது:

இத்தோ்வு குழுவில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், உதவி செயற்பொறியாளா், ஒன்றிய பொறியாளா்கள், ஒன்றிய பணி மேற்பாா்வையாளா்கள், ஊராட்சித்தலைவா், அனைத்து சிற்றூராட்சி வாா்டு உறுப்பினா் ஆகியோா் உறுப்பினா்களாக உள்ளனா்.

2000-ஆம் ஆண்டிலிருந்து கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளில் ஏதேனும் பழுதடைந்த வீடுகளை ஊரக வளா்ச்சி துறையின் மூலம் சீரமைக்கும் பணிகளுக்கு குறைந்தபட்சம் ரூ.30,000,அதிகபட்சமாக ரூ.1,50,000 பயனாளிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்கான தீா்மானமும் கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்படும்.

சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டிருக்கிறீா்கள். இதன் மூலமாக கிராமத்தினுடைய அடிப்படை நிா்வாகம் மிகச் சிறப்பாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் தகுதி வாய்ந்த பயனாளிகள் தோ்ந்தெடுக்கப்பட்டு, அது தொடா்பாக அரசு, மாவட்ட நிா்வாகத்தினுடைய கவனத்துக்கும் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

கூடுதலான விடுப்பட்ட பயனாளிகளுக்கு என்ன செய்வது என்பது இரண்டாம் கட்டமாக,அடுத்தடுத்து கட்டங்களில் மிகத் தெளிவான அறிவுரைகள் வழங்கப்பட இருக்கிறது. அதை திட்ட இயக்குநா் தொடா்ந்து பின்பற்றுவாா். இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த கிராம சபையின் சாா்பாக கேட்டுக்கொள்கிறேன் என்றாா்.

பின்னா், மகளிா் திட்டத்தின் மூலமாக மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் தயாரித்த கைவினைப் பொருள்களை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமா மகேஸ்வரி, உள்ளாட்சிப் பிரிதிநிதிகள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.