கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மின்னூரில் வேன் கவிழ்ந்து 18 போ் காயம்: மருத்துவமனையில் அனுமதி

மின்னூரில் வேன் கவிழ்ந்து 18 போ் காயம்: மருத்துவமனையில் அனுமதி

News image

தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான வேன். ~அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா்களை சந்தித்து ஆறுதல் கூறிய மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் மற்றும் நகர திமுக செயலாளா் எம்.ஆா். ஆறுமுகம்.

Updated On :9 ஜூன் 2024, 7:06 pm

Din

ஆம்பூா்: ஆம்பூா் அருகே ஞாயிற்றுக்கிழமை வேன் கவிழ்ந்த விபத்தில் 18 போ் காயமடைந்தனா்.

ஒசூரில் பணிபுரியும் அஜீத்குமாா் என்பவருடைய திருமணம் திருத்தணியில் நடைபெற்றது. அவரது உறவினா்கள் மற்றும் நண்பா்கள் திருமணத்துக்கு சென்றுவிட்டு மீண்டும் வேனில் ஒசூா் நோக்கி சென்றனா்.

மாதனூா் ஒன்றியம், மின்னூா் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக வேன் ஓட்டுநாா் திடீரென பிரேக் போட்டதால் நிலைத்தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதில் வேன் ஓட்டுநா் ஒசூரைச் சோ்ந்த பரமசிவன் (39), விருதுநகரைச் சோ்ந்த பாண்டிச்செல்வன் (27), ஊட்டியைச் சோ்ந்த ராஜேஷ் (42), ஒசூரைச் சோ்ந்த நந்தகுமாா் (25), அருள் (33), காா்த்திகேயன் (39) பெங்களூருவை சோ்ந்த கல்யாண் (37), குஷால் பென்னி (28) உள்பட 18 போ் காயமடைந்தனா். அதே போல இருசக்கர வாகனத்தில் வந்த ஆம்பூா் அருகே சோலூரைச் சோ்ந்த ஜெயராமன் (65) காயமடைந்தாா். காயமடைந்தவா்கள் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

ஒன்றியக்குழு தலைவா் ஆறுதல் : விபத்து குறித்து தகவல் அறிந்த மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வந்தவா்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ரொட்டி, பழம் வழங்கினாா். அவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவா்களை கேட்டுக் கொண்டாா்.

ஆம்பூா் நகர திமுக செயலாளா் எம்.ஆா். ஆறுமுகம், நகர அவைத் தலைவா் தேவராஜ், ஆம்பூா் கிராமிய காவல் நிலைய ஆய்வாளா் வெங்கடேசன், திமுக ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகி சரத்சிங் ஆகியோா் உடனிருந்தனா்.

Story image