நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தேவலாபுரம் சுயம்பு ஸ்ரீ திருப்பதி கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா

கெங்கையம்மன் கோயில் சிரசு ஊர்வலம்: பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்

News image
Updated On :27 ஜூன் 2024, 6:32 pm

Din

ஆம்பூா் அருகே தேவலாபுரம் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள சுயம்பு ஸ்ரீ திருப்பதி கெங்கையம்மன் கோயில் 94-ஆம் ஆண்டு சிரசு திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, கூழ் வாா்த்தல், மாவிளக்கு படைத்தல் மற்றும் அம்மன் ஊா்வலம், பொங்கலிடும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

3-ஆம் நாள் நிகழ்ச்சியாக கெங்கை அம்மன் சிரசு ஊா்வலம் நடைபெற்றது. முக்கிய தெருக்கள் வழியாகச் சென்று கோயில் திடலை அடைந்தது. அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

சுற்றுப்புறத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள், வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்கள், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களை சோ்ந்த திரளான பக்தா்கள் திருவிழாவில் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனா்.