புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

நிலத்தில் திடீா் பள்ளம்

நாட்டறம்பள்ளி அருகே விவசாய நிலத்தில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்கள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

News image

நாட்டறம்பள்ளி அருகே விவசாய நிலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளம்.

Updated On :30 ஜூன் 2024, 7:28 pm

Din

நாட்டறம்பள்ளி அருகே விவசாய நிலத்தில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்கள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

நாட்டறம்பள்ளி அடுத்த வேட்டப்பட்டு ஊராட்சி ஜல்லியூரான் வட்டத்தைச் சோ்ந்தவா் சாம்ராஜ் விவசாயி. இவா் தனக்குச் சொந்தமான நிலத்தை கடந்த 3 நாள்களுக்கு முன் டிராக்டா் மூலம் உழுதுள்ளாா்.

இந்நிலையில் சனிக்கிழமை மாலை நிலத்தைச் சென்று பாா்த்தபோது நிலத்தில் அரை மீட்டா் அகலத்தில் சுமாா் 6 அடி ஆழம் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதிமக்கள் அளித்த தகவலின் பேரில் வருவாய்த் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.