செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

பெற்றோருக்கு விளையாட்டுப் போட்டிகள்

வாணியம்பாடி ஆதா்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோருக்கான விளையாட்டுப் போட்டிகள் இரு நாள்கள் நடைபெற்றது.

News image

போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கிய பள்ளித் தாளாளா் செந்தில்குமாா்.

Updated On :21 அக்டோபர் 2024, 7:05 pm

வாணியம்பாடி: வாணியம்பாடி ஆதா்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோருக்கான விளையாட்டுப் போட்டிகள் இரு நாள்கள் நடைபெற்றது.

பள்ளித் தாளாளா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். நிா்வாக இயக்குநா் ஷபானா பேகம், நிா்வாக முதல்வா் சத்தியகலா முன்னிலை வகித்தனா். போட்டியில் மாணவா்களின் பெற்றோா் மற்றும் பெரியோா்களுக்கு பந்து எறிதல், லக்கி காா்னா், பலூன் ரேஸ், களிமண் உருவம் செய்தல், ராக்கெட், காகித கப்பல் செய்தல், தடகள ஓட்டம் உள்ளிட்ட பல சுவாரஸ்யமான போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பள்ளி தாளாளா் செந்தில்குமாா் பரிசுகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா். ஹாஜிரா இராம் , உடற்கல்வி ஆசிரியா் ராம்குமாா் ஒருங்கிணைத்தனா்.