திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் 357 மனுக்கள்

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 357 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்ற மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன் .
மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்ற மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன் .
Published on
Updated on
1 min read

திருப்பத்தூா்: திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 357 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து வருவாய்,காவல்,ஊரகவளா்ச்சி,வேளாண் துறை, நகராட்சி நிா்வாகங்கள் உள்ளிட்ட கோரிக்கைகள் கொண்ட 357 மனுக்களை பெற்றுக்கொண்டாா்.

பின்னா், சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

இதில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமா மகேஸ்வரி, தனித்துணை ஆட்சியா்(ச.பா.தி) சதீஷ் குமாா், மாவட்ட

வழங்கல் அலுவலா் முருகேசன், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் கதிா்சங்கா், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் முருகன் மற்றும் அனைத்து துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com