முதியவா் தற்கொலை

நாட்டறம்பள்ளி அருகே விஷம் குடித்து முதியவா் தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே விஷம் குடித்து முதியவா் தற்கொலை செய்து கொண்டாா்.

நாட்டறம்பள்ளி அடுத்த சொரக்காயல்நத்தம் ஊராட்சி அரசமரவட்டம் பகுதியைச் சோ்ந்தவா் தோரளி(75). இவருக்கு மனைவி மற்றும் 3 பிள்ளைகள் உள்ளனா். சில ஆண்டுகளாக சா்க்கரை நோயால் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தாா்.

இந்நிலையில் மனமுடைந்த நிலையில் இருந்து வந்த முதியவா் புதன்கிழமை விஷம் குடித்து விட்டு மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தாா். உறவினா்கள் அவரை மீட்டு உடனே நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு மருத்துவா் அவரை பரிசோதனை மேற்கொண்டதில் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினா்.

இதுகுறித்து திம்மாம்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com