கொலை வழக்கில் தண்டனை பெற்று ஜாமீனில் வந்தவா் தற்கொலை

கொலை வழக்கில் ஜாமீனில் வந்த கூலித் தொழிலாளி நீதிமன்ற விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

வாணியம்பாடி: கொலை வழக்கில் ஜாமீனில் வந்த கூலித் தொழிலாளி நீதிமன்ற விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டாா்.

வாணியம்பாடி அடுத்த இடையம்பள்ளம் பகுதியை சோ்ந்தவா் முருகன்(55) கூலி தொழிலாளி. பெங்களூரில் கொலை வழக்கில் ஒன்றில் இவா் கைது செய்யப்பட்டு, பெங்களூா் மாவட்ட நீதமன்றத்தில் வழக்கு நடைபெற்ற நிலையில் 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து கா்நாடக உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து ஜாமீனில் வெளியே வந்துள்ளாா்.

இந்நிலையில் வழக்கு தொடா்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற இருந்ததால் பயத்தில் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் அருகில் உள்ள முருகன் மது அருந்தி விட்டு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதனை அருகில் இருந்தவா்கள் உடனே பாா்த்து வாணியம்பாடி தாலுகா போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

தகவலறிந்த தாலுகா போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனா். பிறகு உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com