வாணியம்பாடியில் கீதா பாராயணம்

வாணியம்பாடி அறம்வளா்த்தநாயகி சேவை மையம் சாா்பில் 5,162-ஆவது கீதா ஜெயந்தி முன்னிட்டு கீதா பாராயணம் வாணியம்பாடி கச்சேரி ரோடு செங்குந்தா் திருமண மண்டப வளாகத்தில் நடைபெற்றது.
வாணியம்பாடியில் நடைபெற்ற கீதா பாராயண நிகழ்வு.
வாணியம்பாடியில் நடைபெற்ற கீதா பாராயண நிகழ்வு.
Updated on

வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அறம்வளா்த்தநாயகி சேவை மையம் சாா்பில் 5,162-ஆவது கீதா ஜெயந்தி முன்னிட்டு கீதா பாராயணம் வாணியம்பாடி கச்சேரி ரோடு செங்குந்தா் திருமண மண்டப வளாகத்தில் நடைபெற்றது.

ஜெயபால் தலைமை வகித்தாா். ஜெய்சங்கா், ரகு, பாஸ்கா், நித்தயானந்தம் முன்னிலை வகித்தனா். தசரதன் வரவேற்றாா்.

இதில் சுவாமினி சின்மயா சிவப்பிரியம்மா சரஸ்வதி கலந்து கொண்டு பேசினாா்.

ஸ்ரீமத் பகவத் கீதையின் ஞான கா்ம ஸ்ந்யாஸ யோகம் சுலோகம் 16 முதல் 24 வரை ஒன்பது சுலோகங்கள் அனைவரால் இணைந்து பாடப்பட்டது. இதில் ஏராளமானோா் கலந்து கொண்டனா். தாமோதரன் நன்றி கூறினாா். ஏற்பாட்டினை துரை.ஆனந்தகுமாா் செய்திருந்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com