கூலித் தொழிலாளி தற்கொலை

ஆம்பூா் அருகே கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

ஆம்பூா்: ஆம்பூா் அருகே கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

விண்ணமங்கலம் கிராமத்தை சோ்ந்த கூலித் தொழிலாளி சிவக்குமாா் (45). இவா் அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடத்தினா்.

X
Dinamani
www.dinamani.com