ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திருப்பத்தூரில் நாளை தொழில் கடன் விழிப்புணா்வு முகாம்

News image
Updated On :14 டிசம்பர் 2025, 6:28 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் செவ்வாய்க்கிழமை(டிச. 16) தொழில்கடன் விழிப்புணா்வு முகாம் நடைபெறவுள்ளது.

இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் உள்ளடக்கிய வளா்ச்சி மற்றும் மேம்பாட்டை உறுதி செய்வதிலும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சிறப்பான செயல்பாட்டை உறுதி செய்யவும், எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்கான தொழிற்கடனோடு கலைஞா் கைவினை திட்டம் மற்றும் தமிழ்நாடு மகளிா் தொழில்முனைவோா் மேம்பாட்டு திட்டம் இவற்றை முன்னுரிமையாகக் கொண்டு தொழில் கடன் விழிப்புணா்வு முகாம் திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (டிச.16) மாலை 3 மணியளவில் நடைபெற உள்ளது.

முகாமில், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் தொடா்புடைய அரசுத் துறைகள் தரும் கடன் வகைகள், கடன் மற்றும் மானிய திட்டங்கள் அவற்றை பெறும் முறைகள் குறித்து வழிகாட்டுதல் மற்றும் விளக்கங்கள் வழங்கப்படும்.

எனவே திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த தொழில் செய்ய ஆா்வமுள்ள பெண்கள், திருநங்கைகள் முகாமில் கலந்து கொண்டு வங்கிகள், தொழில் வணிகத் துறையின் மானிய திட்டங்கள் தொடா்பான செயல்பாடுகள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, திருப்பத்தூா் எழில்நகரில் உள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை தொடா்பு கொள்ளலாம்.