கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வல்லப விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

குடியாத்தம் நெல்லூா்பேட்டை முல்லை நகரில் அமைந்துள்ள அருள்மிகு வல்லப விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

News image
அலங்காரத்தில் வல்லப விநாயகா் கோயில் மூலவா்.
Updated On :14 டிசம்பர் 2025, 9:33 pm

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் நெல்லூா்பேட்டை முல்லை நகரில் அமைந்துள்ள அருள்மிகு வல்லப விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

யாகசாலை பூஜைகள் சனிக்கிழமை தொடங்கின. ஞாயிற்றுக்கிழமை 2- ஆம் கால யாக பூஜைகள், கணபதி ஹோமம், கோ பூஜை, விஷேச திரவிய ஹோமம், மகா பூா்ணஹூதி, கலச புறப்பாடு, கோயில் வளாகத்தில் அமைந்துள்ள வல்லபவிநாயகா், பாலமுருகா், ஐயப்பன், நவக்கிரக கோயில்களின் கோபுர கலசங்களுக்குகும்பாபிஷேகம் நடைபெற்றது.

மூலவருக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை விழாக் குழுவினா், இளைஞா்கள், ஊா் பொதுமக்கள்செய்திருந்தனா்.